வரக்காதொட்ட பாலம் அருகில் V-FORCE செயற்றிட்டம்

இரத்தினபுரி - வரக்காதொட்ட பாலம் அருகில் நாளை V-FORCE செயற்றிட்டம்

by Staff Writer 28-09-2018 | 7:43 PM
Colombo (News 1st) நாட்டின் இளம் தலைமுறையை பலப்படுத்தும் நியூஸ்ஃபெஸ்ட்டின் செயற்பாடே V-FORCE. அதன் மூன்றாவது கட்டத்தை இரத்தினபுரி - வரக்காதொட்ட பாலத்திற்கு அருகில் நாளை (29) முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இளம் தலைவர்களுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் V-FORCE திட்டத்தின் ஊடாக களுகங்கையின் இருமருங்கிலும் 4000 மரக்கன்றுகள் நாளை நடப்படவுள்ளன. மரக்கன்றுகளை நாட்டி வெள்ள அபாயத்தைக் குறைப்பதே V-FORCE திட்டத்தின் நீண்ட கால நோக்கமாகும். இரத்தினபுரி பிரதேச செயலகம், ஏபெட் அமைப்பு மற்றும் பசுமைக்கான தேசிய அமைப்பு ஆகியன இம்முறை மக்கள் சக்தி V-FORCE உடன் கைகோர்த்துள்ளன. மக்கள் சக்தி V-FORCE திட்டத்தின் முதலாவது கட்டம் சிகிரியாவில் நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டம் நீர்கொழும்பு முஹாந்திரம்பிட்டி களப்பில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.