பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் தலைவர் வௌிநாடுசெல்ல அனுமதி

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத் தலைவர் வௌிநாடு சென்று வர அனுமதி

by Staff Writer 27-09-2018 | 5:55 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ் இம்மாதம் 29 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வௌிநாடு சென்று வர நீதவான் இதன்போது அனுமதி வழங்கியுள்ளார்.