தனியார் நிதி நிறுவன கொள்ளை: மூவருக்கு விளக்கமறியல்

சாவகச்சேரியில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை: மூவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 26-09-2018 | 7:10 PM
Colombo (News 1st) யாழ். சாவகச்சேரியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நிதி நிறுவனத்தில் கடந்த வாரம் 18,41,150 ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, நிதி நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.