வாகன விபத்தில் தாயும் இரு மகள்களும் பலி

வாகன விபத்தில் தாயும் இரு மகள்களும் பலி

by Staff Writer 25-09-2018 | 8:49 AM
Colombo (News 1st) அக்கரைப்பற்று - பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் இரண்டு மகள்களும் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியில் சென்ற பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், 2 சிறுமிகள் மற்றும் சிறுவனொருவன் காயமடைந்தனர். நால்வரும் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, 34 வயதான தாயும் 6 வயதான மகளும் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 11 மற்றும் 12 வயதான சிறுவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 12 வயதான மகளும் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.