நியோமால் ரங்கஜீவ பிணையில் விடுதலை

நியோமால் ரங்கஜீவ பிணையில் விடுதலை

by Staff Writer 25-09-2018 | 12:19 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் 27 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 2 இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். எனினும், அவருக்கு வௌிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்