சிரியாவிற்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் ரஷ்யா

சிரியாவிற்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் ரஷ்யா

by Staff Writer 25-09-2018 | 10:27 AM
சிரிய படையினரால் ரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு ஒரு வார காலத்தில், சிரியாவிற்கு புதிய ஏவுகணைகளை ரஷ்யா வழங்குகிறது. இதனடிப்படையில், எதிர்வரும் 2 வார காலத்திற்குள் s-300 ரக ஏவுகணைப் பாதுகாப்பு செயன்முறை வழங்கப்படவுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரச படைகளுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகளை சிரியாவுக்கு அனுப்பவுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்கெய் ஷொய்கு தெரிவித்துள்ளார்.