நுவரெலியா வைத்தியசாலை தொடர்பில் பொலிஸார் விசாரணை

நுவரெலியா வைத்தியசாலை தொடர்பில் பொலிஸார் விசாரணை

by Staff Writer 24-09-2018 | 5:48 PM

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 17 நோயாளர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு வழங்கிய ஆலோசனைக்கிணங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த நோயாளர்களுக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசி பாவனையை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் குறித்த வைத்தியாலைக்கு அறிவித்துள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ள ​நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், குறித்த தடுப்பூசி தேசிய மருந்து தர சோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வௌியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.