10 நாட்களை எட்டிய உண்ணாவிரதம்

10ஆவது நாளாக தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

by Staff Writer 23-09-2018 | 9:59 PM

தமிழ் அரசியல் கைதிகள் சிலர் அனுராதபுரம் சிறைச்சாலையில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில கைதிகள் உடல்நலக் குறைவால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அல்லது புனர்வாழ்வளித்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகள் 8  பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.