களனியில் தந்தை தாக்கியதில் மகன் பலி

தந்தை தாக்கியதில் மகன் பலி: களனியில் சம்பவம்

by Staff Writer 23-09-2018 | 8:12 AM
Colombo (News 1st) களனி - பொல்லேகல பகுதியில் தந்தையொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி மகனைக் கொலை செய்துள்ளார். இவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து, இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 26 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.