கொலையுண்ட தனபால விஜேரத்னத்தின் இறுதிக்கிரியைகள்

தோட்ட மக்களை சட்டவிரோத மதுபானத்திலிருந்து மீட்கப் போராடி கொலையுண்ட தனபால விஜேரத்னத்தின் இறுதிக்கிரியைகள்

by Staff Writer 22-09-2018 | 8:41 PM
Colombo (News 1st)  இரத்தினபுரி பார்ம் கார்டன் தோட்ட மக்களை சட்டவிரோத மதுபானத்திலிருந்து மீட்பதற்காகப் போராடியதால் கொலை செய்யப்பட்ட தனபால விஜேரத்னத்தின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. இரத்தினபுரி - பாம் கார்டன் தோட்டத்தில் கடந்த 19 ஆம் திகதி மாலை 6 மணியளவில் 37 வயதான தனபால விஜேரத்னம் கடத்திச் செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார். இரத்தினபுரி பார்ம் கார்டன் தோட்டத்தைச் சேர்ந்த தனபால விஜேரத்னம் சமூக செயற்பாட்டாளராவார். சட்டவிரோத மதுபானத்திற்கு எதிராக நீண்ட காலமாக குரல் எழுப்பிய தனபால விஜேரத்னத்திற்கு கடந்த காலப்பகுதியில் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பில், பாம் கார்டன் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட தனபால விஜேரத்னத்தின் இறுதிக்கிரியைகள் பார்ம் கார்டன் தோட்டத்தில் இன்று இடம்பெற்றன. பாம் கார்டன் தோட்ட மயானத்தில் அவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.