by Staff Writer 22-09-2018 | 6:58 AM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (22) நியூயோர்க் நோக்கி பயணிக்கவுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நாளை மறுதினம் (24) ஆரம்பமாகவுள்ளது.
இதன் பிரதான கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இதேவேளை, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கு இணையாக எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.