அரசியல் கைதிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 22-09-2018 | 4:48 PM
Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். கைதிகளின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஆர்.தபோரூபன் மற்றும் எஸ்.ஜே.சந்திரதாஸ் ஆகிய கைதிகளே சுகயீனமுற்ற நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.  

ஏனைய செய்திகள்