இராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு: பலர் பலி

ஈரானிய இராணுவ அணிவகுப்பின்போது துப்பாக்கிச் சூடு: பலர் பலி

by Chandrasekaram Chandravadani 22-09-2018 | 12:35 PM
ஈரானின் தென் மேற்கே அமைந்துள்ள அஹ்வாஸ் (Ahvaz) நகரில் இராணுவ அணிவகுப்பின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அருகிலிருந்த பூங்கா ஒன்றிலிருந்து துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியவர்கள் இராணுவ சீருடை அணிந்திருந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 நிமிடங்கள் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு, பின்னர் பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் மீது சூடு நடத்திய துப்பாக்கிதாரிகள், மேடையிலிருந்த அதிகாரிகளைச் சுடுவதற்கு முயற்சித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், துப்பாக்கிதாரிகளில் இருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை பதில் ஆளுநர் அலி ஹுஸைன் ஹொஸெய்ன்ஸாதேஹ் (Ali Hosein Hoseinzadeh) தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.