by Staff Writer 21-09-2018 | 7:52 PM
Colombo (News 1st) வட மாகாண சபை உறுப்பினர்கள் குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வட மாகாண சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் 9 வட மாகாண சபை உறுப்பினர்கள் இந்தியாவிற்கு பயணித்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கடந்த 16 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்தக் குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.
தனக்கு விசா கிடைக்காமையால் தான் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வட மாகாண சபையின் உறுப்பினர்கள் குழு இரு தடவை பயிற்சி நெறிக்காக இந்தியாவிற்கு பயணித்துள்ளதாகவும் மூன்றாம் கட்ட பயிற்சிக்காகவே இவர்கள் இந்தியா சென்றுள்ளதாகவும், வேறு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை எனவும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.