தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் விலகல்

தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ். உதுமாலெப்பை விலகல்

by Staff Writer 21-09-2018 | 7:32 PM
Colombo (News 1st) தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ். உதுமாலெப்பை விலகியுள்ளதாக தேசிய காங்கிரஸின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவராக செயற்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் அனைத்து பதவிகளில் இருந்து விலகுவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கு நேற்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கட்சிக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே அவர் பிரதித்தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தேசிய காங்கிரஸின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.