கறுவா செய்கையாளர்களுக்கு தொழில் தகைமைச் சான்றிதழ்

தொழில்நுட்ப ரீதியான கறுவா உற்பத்தியாளர்களுக்கு தேசியமட்ட தொழில் தகைமைச் சான்றிதழ்

by Staff Writer 20-09-2018 | 1:13 PM
Colombo (News 1st) கறுவா உற்பத்தியை தொழில்நுட்ப ரீதியாக முன்னெடுக்கும் செய்கையாளர்கள் 10,000 பேருக்கு தேசிய மட்டத்திலான 3ஆம் மட்ட தொழில் தகைமை சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான துறைசார் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.