போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பணிமனை

போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பணிமனை

by Staff Writer 18-09-2018 | 9:36 AM
Colombo (News 1st) ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக இன்று (18) முதல் விசேட பணிமனை ஒன்று இயங்கவுள்ளது. பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் இந்த நடவடிக்கை பணிமனை இன்று காலை 6 மணி முதல் இயங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை​, 011 3 - 024 803 , 011 3 - 024 815 மற்றும் 011 3 - 024 850 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கமுடியும். அத்துடன், 011 2 - 472 757 எனும் தொலைநகல் இலக்கத்துக்கும் தகவல்களை வழங்கமுடியும்.