பலாலி விமான நிலையம் இந்தியாவிற்கு இல்லை

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை: நிமல் சிறிபால டி சில்வா

by Bella Dalima 18-09-2018 | 9:01 PM
Colombo (News 1st) பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய சிவில் விமான சேவைகள் அதிகார சபை தயாராகிவருவதாக ''த டைம்ஸ் ஒப் இந்தியா'' பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நிமல் சிறிபால டி சில்வா இதனைக் கூறினார்.