இ.போ.ச. ஊழியர்களின் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

இ.போ.ச. ஊழியர்களின் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Staff Writer 18-09-2018 | 7:27 AM
Colombo (News 1st) வட மாகாணத்தின் சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், குறித்த தனியார் பஸ்ஸின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்று (17) இரவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, அவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இ.போ.ச. பஸ்ஸின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட சாரதிகள் நேற்று (17) பணிப்பகிஸ்ரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்