UPDATE : ஜொனிக்கு பிணை மறுப்பு

UPDATE : ஜொனிக்கு பிணை மறுப்பு

by Staff Writer 17-09-2018 | 5:41 PM

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு பிணை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சதொச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் குருநாகல் மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை, ஜொன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு பிணை வழங்கமுடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க, குறித்த தீர்ப்பை மாற்றி தமக்கு பிணை வழங்குமாறு கோரி ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவினால் முன்வைக்கப்பட்டிருந்த மீளாய்வு மனு தொடர்பிலான தீர்ப்பை அச்சல வென்கப்புலி மற்றும் ஜனத் டி சில்வா ஆகிய நீதிபதிகள் குழாம் இன்று (17) அறிவித்தது.