வரட்சியால் 8 இலட்சம் மக்கள் பாதிப்பு

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை

by Staff Writer 17-09-2018 | 7:24 AM
Colombo (News 1st) வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 104 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 8 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த இந்தப் பிரதேச மக்களுக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு பிரதேச செயலாளர் மட்டத்தில் 58 மில்லியன் ரூபாவுக்கு மேலான தொகை வழங்கப்பட்டுள்ளது.