பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு மாற்றம்

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு இடமாற்றம்

by Staff Writer 17-09-2018 | 12:43 PM
Colombo (News 1st) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் தகவல் தொழிநுட்பப் பிரிவிற்குத் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில் தற்காலிகமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு, நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளது.