by Staff Writer 17-09-2018 | 6:24 AM
Colombo (News 1st) புதிய அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதிப் பதவியை விட பாராளுமன்றத்திலிருந்து பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வது சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவின் தந்தி தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.