by Staff Writer 16-09-2018 | 10:03 PM
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 3 ஆம் கட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
பல கிராமங்களுக்கும் விஜயம் செய்த மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
இந்த செயற்றிட்டத்துடன் பேராதனை பல்கலைகழகமும் ஆதரவு நல்கியது.
மக்கள் சக்தி செயற்றிட்டத்தினூடாக மேற்கொள்ளப்படும்
எந்தவொரு திட்டமும் முறையான ஆய்வுகள் இன்றி முன்னெடுக்கப்படுவதில்லை.
செய்திப்பிரிவின் அனைத்து பணியாளர்களும் இந்த திட்டத்திற்காக தனனார்வமாக ஆதரவு நல்குகின்றனர்.
மக்களித்திடல் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு மக்கள் சக்தி இல்லங்கள்தோறும் திட்டம் முன்னுதாரணமானது.
நாங்கள் பயணித்து அனைத்து கிராமங்களிலும் மக்கள் எங்களுக்கு வரவேற்பளித்தனர், அவர்களுக்கு எமது நன்றிகள்.
பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தனர் பேராசிரியர் உபுல் பீ.திசாநாயக்க, மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திலக் விஜேதுங்க மற்றும்
இந்த திட்டத்திற்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் எமது தயவான
நன்றிகள்.
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்திற்கு சமய தலைவர்கள் ஆசீர்வாதம் வழங்கினர்.