ரயிலுடன் கார் மோதியதில் நால்வர் உயிரிழப்பு

ஓமந்தையில் ரயிலுடன் கார் மோதியதில் நால்வர் பலி

by Staff Writer 16-09-2018 | 11:26 AM
JUST IN ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் ரயில் ஒன்றுடன்  காரொன்று மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குப் பயணித்த கடுகதி ரயில் ஒன்றுடன் இன்று (16) முற்பகல் 10.30 க்கு கார் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவையொன்றில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் மேலும் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.