by Bella Dalima 15-09-2018 | 3:40 PM
Colombo (News 1st) அலங்கார மீன் தொழிற்துறைக்காக செயலணியொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலங்கார மீன் ஏற்றுமதியாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நீர் உயிரின அபிவிருத்தி ஆகிய துறைகளில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த செயலணி செயற்படவுள்ளது.
இதனடிப்படையில், அலங்கார மீன் தொழிற்துறையைப் பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை செயலணி முன்வைக்கவுள்ளது.