யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு

by Staff Writer 14-09-2018 | 3:41 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், சுற்றுமதிலை நிர்மாணிப்பதற்காக நிலம் தோண்டப்பட்டுள்ளது. இதன்போது, பல வருடங்கள் பழைமைவாய்ந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து யாழ். கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற அனுமதியுடன் அதனை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.