இறக்குவானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இறக்குவானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

by Staff Writer 13-09-2018 | 11:30 AM
Colombo (News 1st) இறக்குவானை வடக்கு மானாபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 47 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் பதிவாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கஹவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.