கலிபோர்னிய துப்பாக்கிச் சூட்டில் அறுவர் பலி

கலிபோர்னிய துப்பாக்கிச் சூட்டில் அறுவர் பலி

by Chandrasekaram Chandravadani 13-09-2018 | 1:30 PM
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் பகேர்ஸ்பீல்ட் (Bakersfield) நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உட்பட அறுவர் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நகரத்தில் ட்ரக் வண்டி வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் மற்றும் அவரது மனைவி இருந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அயல் பகுதிக்கு சென்ற துப்பாக்கிதாரி, நடத்திய சூட்டில் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பின்னர் பெண் ஒருவர் மற்றும் குழந்தை ஒன்றைக் கடத்திச் செல்ல முற்பட்டவேளையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த துப்பாக்கிதாரி பலியாகினார். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.