by Staff Writer 12-09-2018 | 11:31 AM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கான தேவை உள்ளதாக கடந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, கோட்டாபய ராஜபக்ஸ இன்று (12) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.