சர்வதேச சிகையலங்காரப்போட்டி: இலங்கையருக்கு பதக்கம்

சர்வதேச சிகையலங்காரப் போட்டியில் இலங்கையின் அழகுக்கலை நிபுணருக்கு வௌ்ளிப்பதக்கம்

by Staff Writer 12-09-2018 | 8:56 PM
Colombo (News 1st) சர்வதேச சிகையலங்காரப் போட்டியொன்றில் இலங்கையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கயல்விழி ஜெயபிரகாஷ் வௌ்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ​OMC World Cup 2018 சர்வதேச சிகையலங்காரப் போட்டி பிரான்ஸில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், மணப்பெண் அலங்காரப் பிரிவில் அழகுக்கலை நிபுணர் கயல்விழி ஜெயபிரகாஷிற்கு வௌ்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 16 வருடங்களாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அழகுக்கலை நிபுணர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், இலங்கைக்கு பதக்கம் கிடைத்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.