by Chandrasekaram Chandravadani 11-09-2018 | 9:23 AM
அமெரிக்கர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்ட ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அமெரிக்க சேவையாளர்கள் தொடர்பில் தற்போது குறித்த நீதிமன்றம் கவனம் செலுத்திவருகின்றது.
இந்தநிலையில், இந்த நீதிமன்றம் சட்டவிரோதமானது என கூறிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், எமது பிரஜைகளைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா அனைத்தையும் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.