மிருகப்பலி த​டை: அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி

கோவில்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடுக்கும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி

by Staff Writer 11-09-2018 | 8:50 PM
Colombo (News 1st) கோவில்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் வகையிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். பருத்தித்துறை - திக்கம் வடிசாலையின் புதிய கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மீள்குடியேற்ற அமைச்சின் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த வடிசாலை புனரமைக்கப்படவுள்ளது.