மீன்களை உணவாக எடுப்பதில் சுகாதார பாதிப்புகள் இல்லை

உஸ்வெலகெய்யாவ கடற்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உணவாக எடுப்பதில் சுகாதார பாதிப்புகள் இல்லை

by Staff Writer 11-09-2018 | 6:27 AM
Colombo (News 1st) உஸ்வெலகெய்யாவ கடற்பகுதியில் கலந்துள்ள எண்ணெய் காரணமாக குறித்த பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உணவிற்கு எடுத்துக்கொள்வதில் எவ்வித சுகாதார பாதிப்புக்களும் இல்லை என சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எண்ணெய்க் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார். அத்துடன், இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கபபட்டுள்ளதாக நாரா தெரிவித்துள்ளது. அதேநேரம், ஹிக்கடுவை மற்றும் நீர்கொழும்பு கடற்பகுதிகளிலும் இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளைம தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க தெரிவித்தார். இது தொடர்பிலான முதற்கட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் இரு தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருள் கொண்டுவரப்பட்ட கப்பலிலிருந்து அவை இறக்கப்படும் சந்தர்ப்பத்தில் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர், குழாயில் ஏற்பட்ட கசிவு வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்