கிங் - நில்வளா அபிவிருத்தி ஊழல் குறித்து விசாரணை

கிங் - நில்வளா அபிவிருத்தியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்து மீண்டும் விசாரணை

by Staff Writer 10-09-2018 | 6:22 PM
Colombo (News 1st) கிங் - நில்வளா அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை - மாகம்புர ருஹூனு சர்வதேச கேட்போர் கூடத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். கிங் - நில்வளா அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நிலவும் தாமதம் மற்றும் மந்தகதி போன்றவற்றை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.