ஆஸியில் வீடொன்றில் 5 சடலங்கள் கண்டுபிடிப்பு

வீடொன்றில் 5 சடலங்கள் கண்டுபிடிப்பு: அவுஸ்திரேலியாவில் சம்பவம்

by Chandrasekaram Chandravadani 09-09-2018 | 6:53 PM
அவுஸ்திரேலியாவின் பேர்த் (Perth) புறநகர்ப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5 வரையான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவொரு துயரமான சம்பவம் எனக் குறிப்பிட்ட பிரதி கமிஷ்னர் போல் ஸ்டீலி, பாதுகாப்பு குறித்த கவலைகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.