போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தாய்லாந்தில் கைது

by Staff Writer 09-09-2018 | 11:18 AM
Colombo (News 1st) நாட்டின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சாலிய பெரேரா என்பவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச பொலிஸாரால் இது குறித்து நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர், 2013 அம் ஆண்டு 30 கிலோகிராம் ஹெரோயினுடன் நாட்டில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு சந்தேகநபர், நாட்டிலிருந்து தப்பிச்சென்றதுடன், அவரை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் சர்வதேச பொலிஸாரூடாக சிவப்பு அறிவித்தலை விடுத்தனர். இதன்படி, குறித்த சந்தேகநபர் தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவினர் இராஜாங்க மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.