பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 30,195 பேர் கைது

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 30,195 பேர் கைது

by Staff Writer 09-09-2018 | 11:25 AM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 30,195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிடியாணை பிறக்கப்பட்ட 9,261 சந்தேகநபர்களும் அடங்குகின்றனர். இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் இதுவரை 11 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய சாரதிகளும் அடங்குகின்றனர். அதேநேரம் குறித்த காலப்பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி 38 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏனைய செய்திகள்