தென் சூடானிய விமான விபத்தில் 19 பேர் பலி

தென் சூடானிய விமான விபத்தில் 19 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 09-09-2018 | 10:08 PM
வட ஆபிரிக்க நாடான தென் சூடானின் மத்திய பகுதியில் சிறிய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட நால்வர் மட்டுமே உயிர் தப்பியுள்ளதாக அரச பேச்சாளர் தபான் அபேல் அகீயுக் தெரிவித்துள்ளார். தலைநகர் ஜுபாவிலிருந்து யிரோல் நகருக்கு 23 பேருடன் பயணித்தை ஆரம்பித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.