மைத்திரிபால புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார்

மைத்திரிபால சிறிசேன புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார்: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 08-09-2018 | 7:17 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேகாலை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் சென்றிருந்தார். இதன்போது, நிவித்திகலயில் இன்று நடபெற்ற நிகழ்வில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவினர். அதற்கு, ''நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி தவறிழைத்தேன். அவர் புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார் என நினைக்கின்றேன்,'' என மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.  

ஏனைய செய்திகள்