by Staff Writer 08-09-2018 | 11:08 AM
COLOMBO (News 1st) புத்தளம் - நுரைச்சோலை பகுதியில் 5,000 ட்ரமடோல் வில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நுரைச்சோலை நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் 25 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.