தெங்கு செய்கையிடும் காணிகளை பதிவுசெய்வது கட்டாயம்

தெங்கு செய்கையிடப்படும் காணிகளைப் பதிவுசெய்வது கட்டாயம்

by Staff Writer 08-09-2018 | 11:35 AM
COLOMBO (News 1st) தெங்கு செய்கையிடப்படும் காணிகளை பதிவு செய்வது கட்டாயமாக்குவதற்கு தெங்கு பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது. கூகுள் வரைபடம் மற்றும் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் காணிகளை பதிவுசெய்வதாக சபையின் தலைவர் கபில யகன்தலாவ தெரிவித்துள்ளார். தெங்கு செய்கை செய்யப்படும் காணிகள் தொடர்பில் தேவையான அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.