யாழில் 'நெஞ்சம் மறப்பதில்லை' இசை நிகழ்ச்சி

யாழில் நெஞ்சம் மறப்பதில்லை இசை நிகழ்ச்சி: தென்னிந்திய இசைக்கலைஞர்கள் நாட்டை வந்தடைந்தனர்

by Bella Dalima 07-09-2018 | 7:19 PM
Colombo (News 1st)  சக்தி தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ள ''நெஞ்சம் மறப்பதில்லை'' இசை நிகழ்ச்சி நாளை (08) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள தென்னிந்திய இசைக்கலைஞர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நாளை மாலை 6.30-க்கு ''நெஞ்சம் மறப்பதில்லை'' இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஆர்.பரத்வாஜ், பின்னணிப் பாடகர்களான வி.வி.பிரசன்னா, எச். அனந்து ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். சாரங்காவின் இசையில், சக்தி சுப்பர் ஸ்டார்ஸூம் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.