by Bella Dalima 07-09-2018 | 5:01 PM
Colombo (News 1st) சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்புகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மாரவில பிரதான நீதவான் இன்று இதனை அறிவித்தார்.
மாரவில பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பு தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, முறைப்பாட்டாளரான மாரவில பொலிஸார் சார்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.