நெல்லுக்கான விலையை அதிகரிக்க அனுமதி

கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி

by Bella Dalima 07-09-2018 | 5:21 PM
Colombo (News 1st)  கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம், ஒரு கிலோ நாடு, மற்றும் சம்பா நெல்லுக்கான விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இதனடிப்படையில், இதுவரை ஒரு கிலோ நாட்டரிசி நெல்லுக்கான விலை 38 ரூபாவிலிருந்து 40 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், சம்பா நெல்லுக்கான ஒரு கிலோவிற்கான விலை 41 ரூபாவிலிருந்து 43 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, சிறுபோக அறுவடையில் 6 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல், நெல் விநியோக சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. அம்பாறை மாவட்டத்திலேயே அதிகத் தொகையான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.