மேலதிக நேர வகுப்பில் வழங்கப்பட்ட உணவு விஷமானது

மேலதிக நேர வகுப்பில் வழங்கப்பட்ட உணவு விஷமானது: 54 பிள்ளைகள் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை

by Staff Writer 06-09-2018 | 4:06 PM
Colombo (News 1st)  உணவு விஷமடைந்ததன் காரணமாக 54 பிள்ளைகள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 19 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வட்டவளை -டெம்பல்டோ தோட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 13 வயது வரையான சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்திலுள்ள பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்படும் மேலதிக நேர வகுப்புகளின் போது வழங்கப்பட்ட உணவு விஷமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். உணவு விஷமடைந்ததால் பிள்ளைகள் மயக்கமுற்றதுடன், வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.