by Staff Writer 06-09-2018 | 9:45 PM
Colombo (News 1st) தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்தியினூடாக கடந்த வருடம் 457.85 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களிலும் தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்தியை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இரட்டை தெங்கு விதை தயாரிப்பு முதலானவற்றுக்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், அறுவடை மற்றும் செயற்திறனை நவீனமயப்படுத்துதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடு தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.