தெஹிவளை தீவிபத்தில் கர்ப்பிணி வைத்தியர் உயிரிழப்பு

தெஹிவளை வீடொன்றில் தீ விபத்து: கர்ப்பிணி வைத்தியர் உயிரிழப்பு

by Staff Writer 06-09-2018 | 5:02 PM
Colombo (News 1st) தெஹிவளையில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வைத்தியர் கர்ப்பிணிப் பெண் என களுபோவிலை வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். சம்பவத்தில் காயமடைந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் 5 வயதான பிள்ளையும் களுபோவிலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தெஹிவளை தீயணைப்புப் பிரிவினரால் நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.