15 மில்லியன் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருள் அடங்கிய வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

by Staff Writer 06-09-2018 | 3:40 PM
Colombo (News 1st)  ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்திலிருந்த கொள்கலன் ஒன்றில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருள் அடங்கிய வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சுங்கப் பிரிவினருடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்டுள்ள போதை வில்லைககளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன், அவை இதுவரை நாட்டிற்கு கொண்டு வரப்படாத போதைப்பொருள் வகையைச் சேர்ந்தது எனவும் பொலிஸார் தெரிவித்தனர், குறித்த கொள்கலன் லிபியாவிற்கு அனுப்புவதற்காகவே இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.