எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டவர் உயிரிழப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 06-09-2018 | 3:48 PM
Colombo (News 1st) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று (05) ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். ஹட்டன் - தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், பிரதேச அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, உணவு விஷமடைந்ததன் காரணமாக பேரணியில் கலந்து கொண்ட சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 25 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதுடன், 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய செய்திகள்